என் தமிழன்னை பெற்றத் தமிழ் மகளான தமிழச்சி தங்கபாண்டியனுக்கு, இரசிகை எழுதும் ஓர் அன்பு கடிதம்.
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbV92tdXlff8t7RygRTybDpfFMqx-aTmPN0s-nJ1PgyPw5sFpowap_x9XZQmBfOIdVihDuTlG6FqZgOLxcJyoUO7BXBWLyOp92y5z1r1pHAu8cB66jBBQEcbpdSYr919ED1AzW-5GRlbEb/s320/IMG_20210401_101322_792.jpg)
தமிழச்சி தங்கபாண்டியன் பெருமழையாய் பெய்யும் தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சாற்றலுக்கு முன்னால், இதோ சில சிறு மழைத்துளிகள்! என் தமிழன்னை பெற்றத் தமிழ் மகளான தமிழச்சி தங்கபாண்டியனுக்கு, இரசிகை எழுதும் ஓர் அன்பு கடிதம். சுமதியாக பூமியில் பிறந்து, தமிழச்சியாக வலம் வரும் தமிழாசிரியர் தங்கப்பாண்டியனின் மகளான தங்களை என் முன்மாதிரியாக கருதுகிறேன். இன்றைய மகளிர் பெரிதும் விரும்பும் தங்கநகைகளை வெறுத்து, பாரம்பரிய தமிழ் பெண்ணாக உலகையே சுற்றி வரும் தங்களின் தமிழார்வம் விண்ணை வியக்க வைக்கிறது. ஆங்கில இலக்கியங்களை கற்று, ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய நீங்கள் கவிஞர், பாடலாசிரியர், பேச்சாளர், எழுத்தாளராக உருவெடுத்து மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளீர்கள். நடராசரை வணங்கி, சலங்கையொலி எழுப்பி, அரங்கையே அதிர வைக்கும் உங்களது நாட்டிய மற்றும் நாடக கலைத்திறன் பிரம்மிக்கத்தக்கது. 2019, மே மாதம் 24ம் நாள் திராவிட முன்னேற்ற கழகத்தின் பிரதிநிதியாக தென்சென்னை தொகுதியிலிருந்து நாடளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டு, இன்று நாடாளுமன்றத்தையே தங்களது பேச்சுத் திறனால் கலக்கி கொண்டிருக்கிறீ