Posts

Showing posts from September, 2021

தமிழக முதல்வர், திரு. ஸ்டாலின் அவர்களுக்கு, மாணவி கரோலின் எழுதும் வாழ்த்து கடிதம்.

Image
 தமிழக முதல்வர், திரு. ஸ்டாலின் அவர்களுக்கு, மாணவி கரோலின் எழுதும் வாழ்த்து கடிதம். திரு. மு க. ஸ்டாலின்  மே 7 ம் தேதி, 2021-ம் ஆண்டு தமிழகத்தில் ஓர் பிரம்மாண்ட நிகழ்வு அரங்கேறியது. அன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாவட்ட ஆட்சியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு முன்னாள் மேடையில் சிங்கம் போல் வீற்றிருந்தார் தலைவர், திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழக மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் முற்று புள்ளி வைக்க இதோ வருகிறார் எங்கள் தலைவர். சோவியத் நாடான ரஷ்யாவின் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் பெயரை கொண்ட எங்கள் தலைவர், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளராகவும், ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சென்னை மாநகரத்தின் மேயராகவும், திமுகவின் செயல் தலைவராகவும், பொருளாளராகவும், துணைச் செயலாளராகவும், உள்ளாட்சித துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும், எதிர் கட்சி தலைவராகவும் இருந்து, இன்று மக்களின் தலைவராகவும் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவியேற்கிறார். ஆளுநர் பன்வாரிலால் தொடங்க, தனது உறுதி மொழியை கனிவுடனும், கடமையுடனும்