அம்மா
அம்மா மகளின் அன்பான உறவை வெளிபடுத்தும் ஒரு குட்டி கதை. அவர்களை பார்த்து வியந்து போகாத ஆளே கிடையாது. தோழில்கள் போல பழகுவார்கள். எத்தனை கால நட்பு என்று கேட்டால், 20 வருட பந்தம் என்று முகத்தில் புன்னகையுடன் கூறுவார்கள். அவளுக்கு அவள் தாய் தான் முதல் தோழி. ஏனோ தெரியவில்லை, அவளை ஒரு போதும் "அம்மா" என்று அழைத்ததே இல்லை. "தாயை பெயர் சொல்லி அழைக்கும் பெண்ணை இன்று தான் பார்கிறேன்" எல்லாம் நீ குடுக்குற செல்லம் தான்! என்று கூற, அம்மா அடுப்படியில் சிரித்து கொண்டே வெங்காயம் நரிக்கிக் கொண்டிருந்தாள். எங்க காலத்துலேலாம்... அய்யோ! ஆச்சி ஆரம்பிக்காதிங்க... உங்க காலம் வேற, எங்க காலம் வேற... அம்மாவ பேர் சொல்லி கூப்டா என்ன? மரியத மனசுல இருந்தா போதும், என்றல் மகள். ஹ்ம்ம்ம், ரொம்பத்தான்... என்று நகைத்தாள், ஆச்சி. ஒரு வருடம் கழித்து, அவளுக்கு ஒரு நல்ல வரன் வந்தது. அவளும் திருமணத்திற்கு சம்மதித்தால். அன்று அவளை பெண் பார்க்க மாப்பிளை குடும்பத்திலிருந்து அனைவரும் வந்திருந்தார்கள். தன் அம்மாவின் பிரோவிலிருந்து ஒரு அழகான மஞ்சள் நிற புடவையை எடுத்து கட்டியிருந்தால். மாப